நல்லதை தொடர்ந்து செய்யுங்கள்



* நல்லது செய்தால் இறைவன் நமக்கு கைகொடுப்பார். குறிப்பாக கை, கால், கண்களை வழங்கிய இறைவன்,
சிந்திப்பதற்கு புத்தியும் வழங்கியுள்ளார். சக்தியும், புத்தியும் இருப்பதற்குள் நல்ல செயல்களை தொடர்ந்து செய்ய வேண்டும்.

* ஆசைக்கு மேல் ஆசை, தேவைக்கு மேல் தேவை என்று பறக்க வேண்டியதில்லை, அப்படி மற்றவர்களைப் பறக்காமல் இருக்கச் செய்வதற்காக நாமும் எளிமையாக வாழ வேண்டும்.

* பேச்சு, எண்ணம், செய்கை, உணவு, உடை, செலவு இவற்றை, வாழ்க்கைக்கு தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர விரயம் செய்யக்கூடாது.

* குடும்ப பொறுப்புகளைக் கூடிய விரைவில் குறைத்துக் கொண்டு, அதற்குப் பதிலாக பொதுமக்களுக்காக பொறுப்புகளை எடுத்துக் கொண்டு புண்ணியம் சம்பாதிக்க வேண்டும்.

* வாழ்க்கையில் கட்டுப்பாடு இருந்தால் தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் முதலில் வேண்டும். அகங்காரம் போனால் தான் அடக்கம் வரும்.




Comments

Popular posts from this blog

The World First Banking Robot In Chennai # Interesting One !!!

Funny Maths Quiz.. Operation Surya Hope details

உங்கள் ஃபேஸ்புக் லைக்கும், ஹார்ட்டும் மைனஸ் 30 டிகிரியில் சேமிக்கப்படுகிறது ! #FacebookDataCenter