நல்லதை தொடர்ந்து செய்யுங்கள்
* நல்லது
செய்தால் இறைவன் நமக்கு கைகொடுப்பார்.
குறிப்பாக கை, கால், கண்களை
வழங்கிய இறைவன்,
சிந்திப்பதற்கு புத்தியும் வழங்கியுள்ளார். சக்தியும், புத்தியும் இருப்பதற்குள் நல்ல செயல்களை தொடர்ந்து செய்ய வேண்டும்.
சிந்திப்பதற்கு புத்தியும் வழங்கியுள்ளார். சக்தியும், புத்தியும் இருப்பதற்குள் நல்ல செயல்களை தொடர்ந்து செய்ய வேண்டும்.
* ஆசைக்கு மேல் ஆசை, தேவைக்கு மேல் தேவை என்று பறக்க வேண்டியதில்லை, அப்படி மற்றவர்களைப் பறக்காமல் இருக்கச் செய்வதற்காக நாமும் எளிமையாக வாழ வேண்டும்.
* பேச்சு, எண்ணம், செய்கை, உணவு, உடை, செலவு இவற்றை, வாழ்க்கைக்கு தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர விரயம் செய்யக்கூடாது.
* குடும்ப பொறுப்புகளைக் கூடிய விரைவில் குறைத்துக் கொண்டு, அதற்குப் பதிலாக பொதுமக்களுக்காக பொறுப்புகளை எடுத்துக் கொண்டு புண்ணியம் சம்பாதிக்க வேண்டும்.
* வாழ்க்கையில் கட்டுப்பாடு இருந்தால் தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் முதலில் வேண்டும். அகங்காரம் போனால் தான் அடக்கம் வரும்.
Comments
Post a Comment